Wednesday, 07.03.2024, 4:33 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

அனைத்துவிதமான தோஷங்களும் பரிகாரம்

 
காஞ்சீபுரம்.   

1. இஷ்ட சித்தி தீர்த்தம்:
இத்தீர்த்தம் காஞ்சி நகரின் நடுநாயகமாகவுள்ள கச்சபேசுவரர் திருக்கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள இத்தீர்த்தத்தை கோவிலின் கோபுர வாயிலில் நுழைந்தவுடன் வலக்கை பக்கமாக பார்க்கலாம். இத்தீர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமையில் நீராடினால் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் நீங்கும். 

2. சிவகங்கை தீர்த்தம்:
இந்த தீர்த்தம் கச்சியம்பதியின் வார தீர்த்தங்கள் ஏழுனுள் சோமவாரத்திற்கு உரிய தீர்த்தமாகும். இத் தீர்த்ததலம் காஞ்சி திருவேப்பத் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் இறைவன் சந்நிதிக்கு முன்னே கீழக்கே அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் பாவங்களை போக்கி முக்தி அளிக்கிறது. 

3. மங்கள தீர்த்தம்:
மங்கள தீர்த்தம் எனப்படும் இத்திருக்குளம் காஞ்சி மாநகரின் வட பகுதிளில் உள்ள ஸ்ரீசங்கர மடத்திற்கு அருகில் உள்ளது. இத் தீர்த்தத்தில் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் நீராடி மங்களேசுவரனை வழிபட்டு வந்தால் எல்லா நலங்களும் பெற்று இன்புறுவார்கள். 

4. இந்திர தீர்த்தம்:
இந்த தீர்த்தம் கச்சியம்பதியின் கீழ் எல்லையில் உள்ளது. கச்சிச் திருநகரின் கிழக்கு பகுதியில் திருநெறிக் காலைக்காட்டில் இந்த தீர்த்தம் உள்ளது. இத் தீர்த்தத்தில் எல்லா நாள்களிலும் மூழ்கி பயன் அடையலாம் என்றும் புதன் கிழமை முழ்குவோர் பிற நாள்களில் மூழ்குவோரின் பெரும் சிறப்பை பெறுவர். 

5. காயா ரோகன தீர்த்தம்:
இந்த தீர்த்தம் காஞ்சி தெற்கில் வேகவதி நதியின் வடகரையில் உள்ள காயா ரோகணப் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த தீர்த்தத்தில் வியாழக்கிழமை மூழ்குவதே சிறப்பு. இந்த கிழமையில் மூழ்குவோர் பொருட் செல்வத்தையும், கல்வி செல்வத்தையும், எல்லா நலன்களையும் எளிதில் பெறுவர். 

6. உலகாணி தீர்த்தம்:
இத்தீர்த்தம் காஞ்சி மாநகரின் நடு நாயகனாக விளங்கும் காமாட்சி தேவியின் சந்நிதியில் உள்ளது. இத்தீர்த்தத்தில் வெள்ளிக்கிழமை மூழ்குவதே சிறப்பு. இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர்கள் யாவராயினும் அவர்களுக்கு முக்தி அளிக்கும். பாவம் செய்தவர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் புண்ணிய வராகிவிடுவார்கள். 
 
7. சர்வ தீர்த்தம்:
இந்த தீர்த்தம் காஞ்சி திருவேகம்பத்தின் மேற்கில் காஞ்சி- ஆற்காடு பஸ் நிலையம் அருகே உள்ளது. இத்தலத்தில் சனிக்கிழமை தீர்த்தமாவடுவது சிறப்பு. இத்தீர்த்தத்தில் மூழ்குவோர் இறைவனின் திருவருளால் தீராத கொடிய பாவங்கள் தீரப்பெற்று எல்லா இன்பங்களையும் பெறுவர்
 
பிரம்மஹத்தி தோஷம்
 
.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான கிரக நிலைகள் ஆகும். பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவுகளாக  தீராத நோய்கள் உடலில் ஏற்பட்டு வாட்டும், மணவாழ்கையில், புத்திர பாக்கியம் உண்டாவதில், மாங்கல்ய பாக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்தொழில் பாதிப்பு, தீராத கடன்கள் ஏற்பட்டு வாட்டும். செய்யாத தவறுகளுக்கு தண்டனை அடைவது, மன நிம்மதியின்மை, புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது என இதன் பாதிப்புகள் தோன்றி வாழ்வை சீர்குலைக்கும். பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி அடைய  தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவில் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யவும். கோவை மாவட்டம் பாலமலை சென்று குளத்தில் நீட்டி செங்கோதை, பூங்கோதை அம்மன் சமேத அரங்கநாதரையும் வணங்க தோஷம் நீங்கும். இராமேஷ்வரம் சென்றும் பரிகாரம் செய்து கொள்ளலாம்கால
 
சர்ப்ப தோஷம், 
 
நாகநாதரை வழிபட்டால் கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் மேலும் ராகு கேதுவினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்குகிறது. நாகதோஷத்தால் சில பெண்களுக்கு கருதங்காது, கணவன் மனைவி உறவில் பிரிவு, தொழில் முடக்கம், திருமணத்தடை, புத்திரபாக்கியம் இன்மை ஆகிய தோஷங்கள் ஏற்படுகிறது,கல்லினால் ஆன நாகம் வாங்கி வந்து, இதனை 48 நாட்கள் நவதானியத்தில் ஊற வைத்து பின்னர் ஒரு நல்ல நாளில் கோயில், அர்ச்சகர் மூலம் நாகதோஷத்திற்கு ஹோமம் வளர்த்து நாகப்பிரதிஷ்டை செய்யவும். இதனால் நாகதோஷம் நிவர்த்தியாகி பலன் கிட்டும்
 
மனநோய் அகற்றும் திருவிடைமருதூர்
 
சிவபெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர்  மகாலிங்கமானார். இவரை தரிசிப்போர் மனநோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத்தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச்சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர் என்பது ஐதீகம். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்தில் வந்து இரவில் தங்கி, காலையில் இந்த கோவில் உள்ள சிவபெருமானை வணங்கினால் விரைவில் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 
 
தோஷம் நீங்க
 
1. ராகு தோஷம் -21 தீபங்கள் 
2. சனி தோஷம் -9 தீபங்கள் 
3. குரு தோஷம் -33 தீபங்கள் 
4. துர்க்கைக்கு 9 தீபங்கள் 
5. ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள் 
6. திருமண தோஷம் -21 தீபங்கள் 
7. புத்திர தோஷம் -51 தீபங்கள் 
8. சர்ப்ப தோஷம் -48 தீபங்கள் 
9. கால சர்ப்ப தோஷம் -21 தீபங்கள் 
10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம்.
 
திருமண தடை 
 
ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு பெற்றதாகும். அந்த தேரோட்டத்தின் போது மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து அனுப்பப்படும் பட்டுப்புடவையையே ஆண்டாளுக்கு அணிவிப்பார்கள். திருமணத்தடை உள்ள கன்னிப்பெண்கள் ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உடனே கிடைக்கும் என்கிறார்கள்.
மூலம்
 

மூலம் நக்ஷத்திரம்

கேது பகவானின நக்ஷத்திரம். இந்த நக்ஷத்திரத்தில் பிறந்த கல்யாணமாகாதவர்கள், கீழ்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றில் பரிகாரம் செய்யலாம்.
1. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகர் கோவிலில் பரிகாரம் செய்யலாம்.
2. திருப்பதிக்கு அருகே, காளஹஸ்தி கோவிலுள்ள பாதாள விநாயகரை வணங்கி பரிகாரம் செய்யலாம்.
3. மயிலாடுதறைக்கு அருகே உள்ள  கேதுவின் ஸ்தலமான கீழ்பெரும்பள்ளத்தில் உள்ள கோவிலிலும் பரிகாரம் செய்யலா
ம்.

புற்றுநோய் தீர்க்கும் திருந்துதேவன் குடி அருமருந்தம்மை
புற்று நோய்தீர்க்கும் தலம் திருந்து தேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும்திருந்துதேவன்குடியின்நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

கடன் தொல்லைகள் தீர்க்கும்திருச்சேறை ருண விமோச்சனர்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளதுதிருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில்ருண விமோச்சனராய்அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்றுகூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமேஎன மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

 

சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும்திருபுவனம்சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

 

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,

வணங்க வேண்டிய “ஸ்ரீவாஞ்சியம்”காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.
 

அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

 

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும்திருநல்லம்:
முக்கண்ணன்உமா மகேஸ்வரராய்மேற்கு நோக்கி வீற்றிருக்க, ” அங்கவள நாயகியாய்அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். ” பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன்என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், ” ஸ்ரீ வைத்திய நாதர்சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம்வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

 

தீரா நோய்கள் தீர்க்கும்வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர்
மயிலாடுதுறைசீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம்வைத்தீஸ்வரன் கோவில் “. செவ்வாய் தோஷம் நீக்கும்அங்காரகனுக்குரியதிரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும்தன்வந்திரிஇத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம்திருவாடுதுறை
கும்பகோணம்மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும்திருவாடுதுறை”. ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

 

சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்
மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும்கூத்தனூர்”. நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறைதிருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

 

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்
காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்
கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்
கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில்ஜூரகேஸ்வரர்
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்
ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி
மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்
குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்
விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்

 

 
 
Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz