sitemenus
Live Gold
WEB
sports
|
மலர் ஆருடம்
ஆரூடம் கேட்பவரை ஏதாவது இரு மலர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டு அவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்துக் கொண்ட மலர்களுக்குரிய கிரகங்களை குறித்துக் கொள்ள வேண்டும். முதலாவதாக கூறப்படும் மலருக்குரிய கிரகம் சிந்தனையில் உள்ள கேள்விக்குரிய விசயத்தையும், இரண்டாவதாக கூறப்படும் மலருக்குரிய கிரகம் கேள்விக்குரிய விசயத்தின் சாதக பாதக நிலைகளையும் சுட்டிக் காட்டும். கிரகங்களும் அவற்றிற்குரிய மலர்களும் கீழே தரப்பட்டுள்ளன.
சூரியன் : செந்தாமரை, சூரியகாந்தி, வெள்ளெருக்கு
உதாரணமாக ஒருவர் முதலில் வெண் தாமரை மலரயும், இரண்டாவதாக செவ்வல்லி மலரயும் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம். இதற்கான பலா பலன்களைப் பார்ப்போம். மலர் கிரஹம் சுக்கிரன் மனைவியைக் குறிக்கும் கிரகம். கேது பிரிவினையைக் குறிக்கம். எனவே அவருடைய மனைவியுடன் அவருக்கு பிரிவினை ஏற்படலாம். இது ஒரு வகையான பலன். சுக்கிரன் பணம், வீடு, வாகனம் இவைகளைக் குறிக்கும் கிரகம், கேது தகராரைக் குறிக்கும். எனவே கேள்வி கேட்பவருக்கு பணம், வீடு, வாகனம் சம்பந்தமாக வழக்கு இருக்கலாம். இது மற்றொரு பலன். மொத்தத்தில் சுக்கிரன், கேது சேர்க்கைக்குரிய பலாபலன்களை கூறவேண்டும். மேற்கண்டவாறு ஆரூடம் கேட்பவரை இரண்டு பூக்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டு, அப்பூக்களைக் குறிக்கும் கிரகங்களைக் கண்டறிந்து, அவ்விரண்டு கிரகங்களையும் கிரக சேர்க்கையாக எடுத்துக் கொண்டு, அக்கிரக சேர்க்கைக்குரிய பலாபலன்களை நாடி ஜோதிட முறையில் கூறினால் பலன்கள் சரியாக இருக்கும். |
TIME
NASA
calculator
BBC
YA HOONews
|