9.5.2016 அன்று சூரியன், புதன், பூமி நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வே புதன் கிரகம் சூரிய விட்டம் கடக்கும் நிகழ்வாகும் திருக்கணித பஞ்சாங்கப்படி 9.5.2016 அன்று மாலை மணி 5.16 க்கு சூரியன் மேஷத்தில் 25 பாகை 43 கலை 24 விகலையில் உள்ளது, புதன் மேஷத்தில் 25 பாகை 43 கலை 24 விகலையில் உள்ளது, அதாவது பரணி 4 ல் சூரியன் புதன் இருக்கிறது. இந்த நிகழ்வை நாம் கண்ணால் பார்க்கிறோம்.
வாக்கிய பஞ்சாங்கப்படி 9.5.2016 அன்று சூரியன் மேஷத்தில் 25 பாகை 10 கலை 42 விகலையில் உள்ளது, புதன் மேஷத்தில் 08 பாகை 49 கலை 28 விகலையில் உள்ளது, அதாவது பரணி 4 ல் சூரியன் , புதன் மேஷத்தில் அஸ்வினி 3 ல் இருக்கிறார், இப்பொழு உங்களுக்கு தெரியும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் எது உண்மையான நிகழ்வு என்று நீங்கள் நேரில் பார்த்து முடிவு எடுங்கள். சூரியன், புதன் இரன்டு கிரகங்கள் ஒரே பாகை, கலை, விகலையில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி உள்ளது, ஆனால் வாக்கியத்தில் புதன் அஸ்வினி 3 ம் பாதத்தில் இருக்கிறது அதாவது வாக்கியம் படி 16 பாகை 53 கலை 56 விகலை வித்தியாசம் உள்ளது நீங்கள் 9.5.2016 அன்று மாலை 5 மணிக்கு மேல் சூரியனை புதன் கடப்பதை நேரில் பார்த்து முடிவு எடுக்கவும் எது உண்மையான பஞ்சாங்கம் என்று தெரியும் மேலும் வாக்கியத்தில் ஏன் வித்தியாசம் வருகிறது என்று விபரம் தெரிந்த ஜோதிடகள் விளக்கம் தரவேண்டுகிறேன்
என்றும் உங்கள்,
ஜோதிடர் சௌ. மேகநாதன், M.Com, M.A (ASTRO), D.A (ASTRO), A.D.A (ASTRO) TALI METHOD (ASTRO),
ஸ்ரீ முருகா ஜோதிட நிலையம்
NO. 32. தா.பேட்டை ரோடு, முசிறி. PO. PIN.621211.
TO VIST
https://www.facebook.com/meganathan soundhrapandian
https://twitter.com/AstroMeganathan
MY WEB
http://srimurugaa.ucoz.com/ நன்றி