|
ஜோதிடரகசியங்கள்
பாரப்பா பரகுரு நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு
செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்
குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்
ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு
அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே
வியாழ பகவான் என விளம்பப்படும் குருபகவான் 4,7,10 மற்றும் 1,5,9
இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இச்சாதகனுக்கு யோகம்
மிகவும் உண்டென்று கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன்
மனையில் வாழ்வார்கள். இன்னும் இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில்
இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய இடங்களில்
நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன்.
இதனை நீயும் அன்புடனே கேட்பாயாக!
கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்
கெடுதியுள்ள மனைவிபகை நோயால் கண்டம்
ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்
அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்
தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு
தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு
கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி
குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே
இனி எட்டாம் இடத்தில் குருபகவான் வீற்றிருப்பின் அவன், வேசி
கள்ளனாகவும், தீய மனைவியால் பகைகொண்டவனாகவும், அவளாலும்,
பகையாலும் கண்டம் அடைபவனாகவும், அரசரது பகை பெற்றவனாகவும்,
பொருட் சேதம் அடைபவனாகவும், நிறைந்த அவமானம் அடைபவனாகவும்,
பெரிய டம்பனாகவும் இருப்பன். மேலும் 6ஆம் இடத்தில் குரு நிற்பின்
சாதகனுக்கு அதனாலும் தோடம் உண்டு. அரசரது பகைநேரும். நோய்
உபாதை ஏற்படும். ஆயினும் பன்னிரண்டாம் இடத்தில் குரு நின்றால்
அதுவே அவனது ஆட்சி வீடானதால் அதனால் எந்த ஒரு குற்றமும்
சென்மனுக்கு இல்லையென்று நீ ஆய்ந்தறிந்து கூறுவாயாக.
கேளப்பா அசுரகுரு கேந்திரகோணம்
கெட்டவர்கள் கண்ணுற்று பார்த்திட்டாலும்
ஆளப்பா அசுரகுரு பலனளிப்பர்
அப்பனே உப்பரிக்கை மேடையுண்டு
வாளப்பா வயிரங்கள் முத்துமாலைகள்
வளமாகப் பொருந்தி நிற்கும் வளவிலேதான்
நீளப்பா நின்றதொரு இராசியாதி
நிலையறிந்து புவியோர்க்கு நிகழ்த்துவாயே
புலிப்பாணி கூறுவதைச் சற்றே கேட்பாயாக! அசுரர்களின் குரு எனப்
போற்றி செய்யப்பெறும் சுக்ராச்சாரி சாதகனின் கேந்திர கோணத்தில் நிற்க
அவரைத் தீய கோள்கள் பார்ப்பினும் அவர் நற்பலன்களையே தருவார்.
அச்சாதகனுக்கு உப்பரிகை மேடையும், கனவயிரமும் முத்துமாலை
போன்ற அணிமணிகளும் அவன் மனையில் பொருந்தி இன்பம்
தருவதாகும். இதனை இலக்கின, இராசி அதிபர்களின் பலமுணர்ந்து
ஆய்ந்து கூறுக.
பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே.
ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான
சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு
ஆயுள் குறைவதுடன், மர்ம உறுப்புகளில் [பீசத்தில்]
நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற
செம்பொன் மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு
ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும்
ஏற்படும். ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால்
சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும்
எனக் கூறுவாயாக.
கனமுள்ள நவமாறு லாபம் மூன்று
கதிர்மைந்த னதிலிருக்க விதியும் தீர்க்கம்
தனமுண்டுபிதுர் தோஷம் சத்துருபங்கம்
தரணிதனில் பேர்விளங்கும் அரசன்லாபம்
குணமுள்ள கருமத்தி லிருக்கநல்லன்
கொற்றவனே வாகனமும் தொழிலுமுள்ளோன்
பொணம் போலபோகாதே சபையில் கூறு
பூதலத்தில் யென்னூலைப் புகழுவாயே.
பெருமைக்குரிய 9,6,11,3 ஆகிய இடங்களில் சூரிய குமாரனான மந்தன்
என்ற சனிபகவான் நிற்க அச்சாதகனுக்கு ஆயுள் தீர்க்கம். நிறை
தனமுடையவர். அதே போல் பிதுர் தோஷமும் உடைய அச்சாதகன் சத்துரு
பங்கனாகவும் இருப்பான். பூமியில் அவனது புகழ் விளங்கிக் காணும். அரச
லாபம் பெறுவான். இனி, சனிபகவான் 10இல் நிற்க அச்சாதகன்
நன்மையான பலன்களையே அடைவான். வாகன யோகம்
உடையவனாகவும், செய் தொழில் கீர்த்தி உடையவனாகவும் விளங்குவான்.
இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போலப்
பேசாமல் இராதே. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டுக் கூறுவாயேல் நீ
புவியில் என்னூலைப் போற்றுவாய்.
பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பானுமைந்தன் பன்னொன்றி லமைந்தவாறும்
சீரப்பா சிறந்தகுரு சப்தமத்தில்
சீறிவரும் கரும்பாம்பு நாலிலேற
ஆரப்பா ஆரல்யிரு மூன்றதாகும்
அப்பனே அருக்கனுந்தான் மூன்றில்போக
வீரப்பா விலகுமடா தோஷம் தோஷம்
விதியுண்டு சென்மனுக்கு விளம்பக்கேளே
இன்னுமொரு கருத்தையும் உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன் நன்கு
கேட்பாயாக! கதிர் மைந்தனாம் சனி 11இல் அமைந்து சிறப்புமிக்க
குருபகவான் சப்தம (7ல்) ஸ்தானத்திலும் இராகு 4 ஆம் இடத்திலும்,
செவ்வாய் மூன்றிலும், சூரிய மூன்றில் போய் நிற்க (சனி பகவானால்)
தோடம் உண்டெனினும் சென்மனுக்கு ஆயுள் உண்டென்று கூறுவதுடன்
மேலும் நான் சொல்லும் கருத்துகளையும் கேட்பாயாக!
1, 1,0 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்டு இவர்களுக்கு இரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள் பீடிக்கப்படுவதுண்டு.இவரது உடலுக்கு நன்மை பயப்பவை மஞ்சள், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிச்சம்பழம், இஞ்சி, பார்லி, தேன் முதலியன ஏற்றதாகும்.
2, 11, 20 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, ஜிரணக்கருவிகள் அதாவது அஜிரணம் வயிற்றுக் கோளாறு, மூத்திரக்காய்கள் சம்பந்தமான நோய்களே விரைவில் ஏற்பட ஏதுவாகும்.இவர்களது உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய பதார்த்தங்களான, முட்டைகோஸ், கீரை வகைகள், வெள்ளரி பிஞ்சு, பழவகைகள் குறிப்பாக முலாம்பழம் ஆகியவைகளை தினசரி தம் உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, ஆரோக்கியம் கொஞ்சம் குறைந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் பீடிக்க ஏதுவாகும்.கிராம்பு, இல வங்கப்பட்டை, குங்குமப்பூ, ஜாதிக்காய் ஆகியவைகளை சேர்த்துக் கொள்ளவேண்டும். எப்பொழுதுமே ஆகாரத்துடன் ஆப்பிள், நெல்லி, அன்னாச்சி, கோதுமை ஆகிய பதார்த்தங்களை அன்றாடம் உபயோகித்து வருவது நல்லது
.4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ தலை சம்பந்தமான அதாவது மூளை, கண், காது, மூக்கு, தொண்டை, வாய், நாக்கு, பல் சம்பந்தமான நோய்கள் ஏதாவது உண்டாகும்.மேற்குறிப்பிட்ட நோயிலிருந்து ஒருவாறு தப்புவதற்கு கீழ்க்காணும் பதார்த்தங்களை தினசரி ஆகாரத்தோடு சேர்த்து வருவது மிகவும் நன்று.சாரப் பருப்பு, வாழைக்காய், மாது ளம்பழம், எலுமிச்சம்பழம், பூசணிக்காய், நாரத்தம்பழம், வாழைப்பழம், முருங்கைக்கீரை,அரைக்கீரை, சிறுகீரை போன்றவைகளையும் உபயோகிக்கலாம்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, நரம்பு சம்பந்தமான வியாதிகளைப பற்றி எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். இழுப்பு, வாத நோய், தூக்கமின்மை ஆகிய கோளாறுகள் எளிதில் பற்றும்.
மேலும் காரட், ஓட்ஸ், வால்நட், ஹேசல்நட் போன்றவைகளை அன்றாடம் உணவு வகையில் உண்டு வந்தால் இவ்வியாதியை தடுக்கலாம்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ தொண்டை, மூக்கு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பற்றககூடியவை. பொதுவாக இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் இருக்கும். குறிப்பாக நல்ல காற்றோட்டமும், உடற்பயிற்சியும் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியமுண்டு.எனவே இவர்கள் தேக ஆரோக்கியத்திற்கு தினசரி ஆகாரத்தோடு, பாதாம் பருப்பு, பீன்ஸ், முலாம்பழம், ஆப்பிள், குங்குமப்பூ, ரோஜா இதழ்கள் ஆகியவைகளை உட்கொண்டு வருவது நல்லது.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப்பெற்றவர்களுக்கோ, சரும் சம்பந்தமான அதாவது தோல் சம் பந்தப்பட்ட வியாதிகளான, கட்டிகள், சொறி சிரங்கு, அலர்ஜி ஆகியவைகள் வரலாம்.இவர்கள் எல்லாவற்றிற்கும் அன்றாடம் உணவில் கூடுமானவரை கீரை வகைகளை சேர்த்துக்கொள்வதோடு, பழச்சாறுகளையும் உணவுடன் உப யோகித்து வந்தால், சரும சம்பந்தமான வியாதிகள் வராமல் அநேகமாக தடுக் கலாம்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, எளிதில் வரக்கூடிய வியாதிகள்,தலைவலி, ரத்த சம்பந்தமான கோளாறுகள் பீடிக்கப்பட வாய்ப்புண்டு. எனவே இவர்கள் கூடுமானவரை மாமிசத்தையும், மாமிச வகைகளையும் விலக்கிவிட்டு, காய்கறிகளையும், கீரை வகைகளையும் அதிகமான அளவில் அன் றாட உணவில் சேர்த்துக் கொண்டு வருவது மிகவும் நல்லது.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ, உஷண சம்பந்தமான ஜுரங்களும்,அம்மை நோயும், குடல்புண், கேன்சர் போன்ற வியாதிகள் எளிதில் பாதிக்கும். கீரை வகைகளில் புளிச்சக்கீரை ஒன்று தான் நன்மை தரக்கூடியது. ஆயினும் முருங்கைக்கீரையை ஓரளவு சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.
மூக்குத்தி அணிவது, காது குத்துவது ஏன்?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது... கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.
நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.
ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்
இதயம், எலும்பு ஆகியவற்றுக்கு காரகர் சூரியன். இவர் நல்ல நிலையில் இருந்தால் பல்வரிசை ஒழுங்காக அமைந்து பற்கள் பளிச்சிடும். எலும்பு முறிவு, இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
பல்லுக்கும் இதயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை, மாலை இரு முறையும் பல் துலக்குபவர்களுக்கு இதயக் கோளாறுகள், மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவாம். ஜோதிட ரீதியில் பார்த்தால், பொதுவாக சூரியனுக்கு இரவில் பலம் குறைவு. இரவில் பல் துலக்கி விட்டு படுப்பது இதயத்துக்கும் நன்மையாகவே அமையும். (பற்களைப் பராமரித்து சூரியனின் பலத்தைப் பெருக்கி, அவர் காரகம் வகிக்கும் பல், இதயம் இரண்டையும் காப்பதாகும்).
பல்வலி, சொத்தை ஏதாவது இருந்து பல்லைப் பிடுங்க்க வேண்டுமென்றால் தாராளமாக பிடுங்கிக் கொண்டு இதயம் ஒரு பங்கு பலமடைந்ததாக எண்ணிக் கொள்ளலாம். (நெஞ்சு வலிக்கு இது பெட்டர் இல்லையா?).
இன்னொரு மருத்துவ ஆய்வு சொல்வது : கால்சியம் சத்து அதிகரிக்க கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகளால் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரிக்குமாம். எலும்பை பாதுகாக்க நினைத்து செயற்கையாக மருந்து சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லதில்லை போல. கூடுமானவரை இயற்கையாக பால் பொருட்களையும் பிற கால்சியம் நிறைந்த பொருட்களையும் சாப்பிட்டு கால்சியம் சத்தை ஏற்றிக் கொண்டால் பிரச்சினையில்லை.
|
calendar
« July 2024 » | Su | Mo | Tu | We | Th | Fr | Sa | | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
|