Wednesday, 07.03.2024, 4:23 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

நட்சத்திரங்கள் தெய்வம் , -ஆறாமிடம் மூலம் ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார்

 

 

 

 


நட்சத்திரங்கள்                                                                                  தெய்வம் 
 

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் (ஞாயிறு)         சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் (திங்கள்);       - சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய்                - முருகன்
திருவாதிரை, சுவாதி, சதயம் - இராகு                              - காளி, துர்க்கை 
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு                           - தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி; - சனி                                  - சாஸ்தா 
ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன்                                     - விஷ்ணு
மகம், மூலம், அசுவினி - கேது                                             - வினாயகர் 
பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் (வெள்ளி )                        - மகா லக்ஷ்மி


  நட்சத்திரங்கள் --------------- அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி        - ஸ்ரீ சரஸ்வதி தேவி 
பரணி               - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை       - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி            - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்        - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை        - ஸ்ரீ சிவபெருமான் 
புனர்பூசம்               - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) 
பூசம்                      - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்           - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 
மகம்                      - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்                      - ஸ்ரீ ஆண்டாள் தேவி 
உத்திரம்               - ஸ்ரீ மகாலக்மி தேவி
ஹஸ்தம்             - ஸ்ரீ காயத்திரி தேவி 
சித்திரை                - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 
சுவாதி                   - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 
விசாகம்               - ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம்                 - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர் 
கேட்டை               - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்                  - ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம்                - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 
உத்திராடம்            - ஸ்ரீ வினாயகப் பெருமான் 
திருவோணம்      - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்               - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம்                   - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்) 
பூரட்டாதி           - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்) 
உத்திரட்டாதி       - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி                 - ஸ்ரீ அரங்கநாதன்

 

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ரோக ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதை அறியலாம். ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

சூரியன்: மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை.

 

சந்திரன்: மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் போன்றவை.

செவ்வாய்: மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள்.

புதன்: இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

குரு: தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு போன்றவை.

சுக்கிரன்: கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பு வியாதிகள் போன்றவை.

சனி: மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிப்பு போன்றவை.

ராகு: அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் போன்றவை

கேது: புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு போன்றவை.


நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத் துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரக தத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்தினை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்

கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

1, 1,0 19, 28ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ,சுமார் நாற்பது வயதிற்கு மேற்பட்டு இவர்களுக்கு இரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள் பீடிக்கப்படுவதுண்டு.

இவரது உடலுக்கு நன்மை பயப்பவை மஞ்சள்,ஆரஞ்சு,எலுமிச்சை,பேரிச்சம்பழம்,இஞ்சி,பார்லிதேன் முதலியன ஏற்றதாகும்.

2, 11, 20ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ,ஜிரணக்கருவிகள் அதாவது அஜிரணம் வயிற்றுக் கோளாறு,மூத்திரக்காய்கள் சம்பந்தமான நோய்களே விரைவில் ஏற்பட ஏதுவாகும்.

இவர்களது உடலுக்கு ஒத்துக் கொள்ளக்கூடிய பதார்த்தங்களான,முட்டைகோஸ்,கீரை வகைகள்,வெள்ளரி பிஞ்சு,பழவகைகள் குறிப்பாக முலாம்பழம் ஆகியவைகளை தினசரி தம் உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

3, 12, 21, 30ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ,ஆரோக்கியம் கொஞ்சம் குறைந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் பீடிக்க ஏதுவாகும்.

கிராம்பு,இல வங்கப்பட்டை,குங்குமப்பூ,ஜாதிக்காய் ஆகியவைகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.எப்பொழுதுமே ஆகாரத்துடன் ஆப்பிள்,நெல்லி,அன்னாச்சி,கோதுமை ஆகிய பதார்த்தங்களை அன்றாடம் உபயோகித்து வருவது நல்லது.

4, 13, 22, 31ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ தலை சம்பந்தமான அதாவது மூளை,கண்,காது,மூக்கு,தொண்டை,வாய்நாக்கு,பல் சம்பந்தமான நோய்கள் ஏதாவது உண்டாகும்.

மேற்குறிப்பிட்ட நோயிலிருந்து ஒருவாறு தப்புவதற்கு கீழ்க்காணும் பதார்த்தங்களை தினசரி ஆகாரத்தோடு சேர்த்து வருவது மிகவும் நன்று.

சாரப் பருப்பு,வாழைக்காய்,மாது ளம்பழம்,எலுமிச்சம்பழம்,பூசணிக்காய்,நாரத்தம்பழம்,வாழைப்பழம்,முருங்கைக்கீரை,அரைக்கீரை,

சிறுகீரை போன்றவைகளையும் உபயோகிக்கலாம்.

5, 14, 23ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ,நரம்பு சம்பந்தமான வியாதிகளைப பற்றி எச்சரிக்கையுடனிருக்க வேண்டும்.இழுப்பு,வாத நோய்,தூக்கமின்மை ஆகிய கோளாறுகள் எளிதில் பற்றும்.

மேலும் காரட்,ஓட்ஸ்,வால்நட்,ஹேசல்நட் போன்றவைகளை அன்றாடம் உணவு வகையில் உண்டு வந்தால் இவ்வியாதியை தடுக்கலாம்.

6, 15, 24ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ தொண்டை,மூக்கு,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பற்றககூடியவை.பொதுவாக இவர்களுக்கு உடல் ஆரோக்கியம் இருக்கும்.குறிப்பாக நல்ல காற்றோட்டமும்,உடற்பயிற்சியும் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியமுண்டு.

எனவே இவர்கள் தேக ஆரோக்கியத்திற்கு தினசரி ஆகாரத்தோடு,பாதாம் பருப்பு,பீன்ஸ்,முலாம்பழம்,ஆப்பிள்,குங்குமப்பூ,ரோஜா இதழ்கள் ஆகியவைகளை உட்கொண்டு வருவது நல்லது.

7, 16, 25தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப்பெற்றவர்களுக்கோ,சரும் சம்பந்தமான அதாவது தோல் சம் பந்தப்பட்ட வியாதிகளான,கட்டிகள்,சொறி சிரங்கு,அலர்ஜி ஆகியவைகள் வரலாம்.

இவர்கள் எல்லாவற்றிற்கும் அன்றாடம் உணவில் கூடுமானவரை கீரை வகைகளை சேர்த்துக்கொள்வதோடு,பழச்சாறுகளையும் உணவுடன் உப யோகித்து வந்தால்சரும சம்பந்தமான வியாதிகள் வராமல் அநேகமாக தடுக் கலாம்.

8, 17, 26ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ,எளிதில் வரக்கூடிய வியாதிகள்,தலைவலி,ரத்த சம்பந்தமான கோளாறுகள் பீடிக்கப்பட வாய்ப்புண்டு.எனவே இவர்கள் கூடுமானவரை மாமிசத்தையும்,மாமிச வகைகளையும் விலக்கிவிட்டு,காய்கறிகளையும்,கீரை வகைகளையும் அதிகமான அளவில் அன் றாட உணவில் சேர்த்துக் கொண்டு வருவது மிகவும் நல்லது.

9, 18, 27ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கோ அல்லது பெயர் எண் அமையப் பெற்றவர்களுக்கோ,உஷண சம்பந்தமான ஜுரங்களும்,அம்மை நோயும்,குடல்புண்,கேன்சர் போன்ற வியாதிகள் எளிதில் பாதிக்கும்.கீரை வகைகளில் புளிச்சக்கீரை ஒன்று தான் நன்மை தரக்கூடியது.ஆயினும் முருங்கைக்கீரையை ஓரளவு சேர்த்துக் கொள்வதில் தவறில்லை.


 

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz