தமிழ் நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன.
இந்தியாவின் மற்ற பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின்
அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும். தமிழ் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்
கரி நாட்களாக கீழே தரப்பட்டுள்ளன.
சித்திரை - 6,15
வைகாசி – 7,16,17
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16,29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,4,10,17
மார்கழி – 6,9,11
தை – 1,2,3,11,17
மாசி – 15,16,17
பங்குனி – 6,15,19
கரி நாளை ‘மாத தியாஜ்ஜியம்’ என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்’ என்றால் ‘விலக்கப்பட வேண்டியது’ என்று பொருள்.
தியாஜ்யம்
ஜெனன தோஷமும் பரிகாரமும்
ஒவ்வொரு பிறப்பு நட்சத்தில் குறிப்பிட்ட நான்கு நாழிகை நேரம் தியாஜ்யம் எனும் தோஷம் பெற்ற காலமாகும்.
இந்த நேரத்தில் குழந்தைகள் பிறப்பு, ருதுவானால் கீழ்க்கண்ட கெடுபலன்கள் உண்டாகும்.
முதல் நாழிகை - தந்தை மரணம்,
இரண்டாம் நாழிகை - தாய் மரணம்,
மூன்றாம் நாழிகை - பெருள் அழிவு, தனநாசம்,
நான்காம் நாழிகை - தனக்கே மரணம், அற்ப ஆயுள்.
இந்த விஷகாலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த நட்சத்ததிரத்தன்று அதற்கான
நட்சத்திர விருட்சத்தை வணங்கி பூஜைகள் செய்து, அன்னதானம், ஆடைதானம் செய்து, கோபூஜை செய்ய தோஷம் நீங்கும்