Wednesday, 07.03.2024, 4:45 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

ஜோதிடக்குறிப்பு

 

பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு எதிலுமே மனத்திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
 ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் நீச்சமடைந்தாலும், ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கைத் துணை மனதிற்கு பிடிக்காமல் போகும். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்/ஆண் சிறப்பான குணநலன்களையும், அழகையும் பெற்றிருப்பர். இவரது மனதிற்கு அப்படித் தோன்றும் நிலை காணப்படும்.
 தனக்குப் பார்த்த பெண் சிறப்பாக படித்திருந்தாலும், குறிப்பிட்ட கல்லூரியில் படித்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று அந்த ஜாதகர் கருதுவார். இதன் காரணமாகவும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படும். 7இல் நீச்ச கிரகம் இருப்பதும் இதனை உணர்த்துவதற்காகவே.
 எனவே, 7இல் நீச்ச கிரகம் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு (படிப்பு/பொருளாதாரம்) குறைந்த இடத்தில் குணத்தில் உயர்ந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகம் இருப்பவர்கள் மனதளவில் திருப்தியடைய முயல வேண்டும். வாழ்க்கைத் துணை வசதி குறைவாக இருந்தாலும் நல்ல ஒழுக்கமான, படித்த ஆண்/பெண் ஆக இருந்தால் உடனே திருமணத்தை முடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.லக்னாதிபதி 6, 8, 12ல் போய் மறைகிறார் என்றால், உட்கார்ந்து கொண்டு சொகுசாக பார்க்கக் கூடிய வேலைகள் கூடாது.
 சனி என்பது நின்று கொண்டு வேலை பார்க்கக் கூடிய கிரகம். நிற்றல், நடத்தல் போன்றவைதான் சனிக்குரிய செயல்பாடுகள். குருவினுடைய ஆதிக்கம் அமர்தல். சனியினுடைய தாக்கம் தனியாக நடந்துபோதல், நடை பயணம் மேற்கொள்ளுதல் போன்றவை. வேலை பார்ப்பவர்களுக்கு, 10ஆம் இடத்தில் சனி இருந்தாலோ, 10ஆம் இடத்தை சனி பார்த்தாலோ, 10க்கு உரியவருடன் சனி சேர்ந்து இருந்தாலோ இவர்களெல்லாம் நின்று, நடந்து வேலை பார்க்கும் தொழிலை ஏற்றுக்கொள்வது நல்லது. மெடிக்கல் ரெப் போன்றவர்கள் பயணித்து, நின்று வேலை பார்க்கிறார்களே இதெல்லாம் சனியினுடைய வேலைதான்.ராகுவோ கேதுவோ லக்கினேசனுடன் சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் இருப்பது யோகமான அமைப்பு, உயர்வு தரும். ஆனால் இந்த அமைப்புக்கு 6ம் வீட்டோனின் சம்பந்தம் ஏற்படுமாயின் ஜாதகருக்கு வாழ்க்கை சிறைவாசம் போல் தெரியும். வயது கூடக்கூட குடும்பப்பற்று மறைந்து, துறவு மனப்பான்மை ஏற்ப்படும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையினை சிறையில் இருப்பது போல் கருதி வாழ்க்கையினை ஓட்ட வேண்டியிருக்கும்.
ஆடி மாதம் பிறந்ததும் புதுமணத் தம்பதியரை பிரித்து வைத்திடும் வழக்கம் நமது இந்து தர்மத்தில் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடிக்கப்படும் அவசியமான ஒரு வழக்கமாகும். ஆடிமாதத்தில் இப்படி ஒரு நடை முறையை தற்போதைய புதுமணத் தம்பதியரிடம் கூறினால், தற்காலக் கணவன்மார்கள் யாரிதைக்கூரிய ஜோதிடன் என்று ஜோதிடரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் நமது முன்னோர்கள் தமது வருங்காலச் சந்ததியினரின் நல்வாழ்வை முன்னிட்டே இவ்வழக்கத்தினை கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுப் போனேன். தற்காலத்தில் இம்மண்ணின் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய இத்தகைய மரபுகள் மறைந்து வருவதும் தற்காலத்திய பல குடும்ப அவலங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.  
           
ஆடிமாதம் தம்பதியர் இணைந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் வெயில் காலத்தில் தாயும் சேயும் சிரமப்படுவர் என்பதால் இத்தகைய ஒரு மரபு கடை பிடிக்கப்பட்டிருக்கலம் என்பது சாதாரணமாக மக்களின் கருத்து. இதில் ஜோதிடர்களின் கருத்து என்ன? சித்திரை மாதத்தில் தலைச்சன் குழந்தையாக ஆண் குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தால் அது தகப்பனுக்கு ஆகாது. அப்படிப் பிறந்தால் குழந்தையின் தந்தை எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் வசதி வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அணைத்தையும் இழந்து சாதாரண நிலைக்கு வந்து விடுவது கண்கூடு என்பர். இது உண்மையே. ஆனால் இதன் பிண்ணனியை ஜோதிடர்கள் கூட ஆராய்ந்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க ஜோதிடத்தை கடுமையாக விமர்சித்துக் கற்றுக்கொண்டவன் என்ற அடிப்படையில் இதை ஆராய்ந்து பார்க்க ஏனையோரை அழைக்கிறேன்.

ஒரு ஜாதகருக்கு சர்ப்ப (பாம்பு) கிரகங்கள் என்று கூறப்படும் ராகு அல்லது கேதுவினுடைய திசையோ புக்தியோ அல்லது அவைகளின் சாரத்தில் (நட்சத்திரங்களில்) அமைந்த கிரகங்களின் திசையோ புக்தியோ நடப்பில் இருந்து கோள்சாரத்தில் ராகு-கேதுக்கள் ஒருவரின் இருப்பிடத்தை குறிக்கும் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்யும்போது ஜாதகர் வசிக்கும் வாழிடங்களுக்கு ராகு – கேதுக்களின் அம்சங்களான பாம்புகள் வரும் என்பது அனுபவ உண்மை. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் இதை பரீட்சித்துப் பார்க்கலாம். ஜோதிடத்தை பரீட்சித்துப் பார்க்க முயல்பவர்களும்    இதை ஆராய்ந்து பார்த்து அதிசயிக்கலாம். தங்களது இருப்பிடத்திற்கு பாம்பு வந்து சென்ற காலகட்டத்தை ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பார்த்தும் இதை அறியலாம். ஒரு வீட்டில் வசிக்கும் பலரில்  யாரேனும் ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட ஜாதக நிலை இருந்தாலும் இது நடக்கும்.
   
நகர்ப்புறங்களில் 14ஆம் மாடியில் வசிப்பவர்கள் எங்கள் வீட்டிற்கு வரவில்லை என ஜோதிடரை இம்சிக்கக்கூடாது. அவர்களுக்கு அவை வேறு வடிவங்களிலும் வரும்.
உதாரணம்: சன்யாசி கேதுவின் அம்சம், விதவைப்பெண் ராகுவினுடைய அம்சம். இவை தவிர வேறு பல அம்சங்களும் உண்டு.

பஞ்ச மஹா புருஷ யோகம்.
இந்த யோகம் பஞ்ச மஹாபுருஷர்களால் ஏற்படக்கூடியது. நவகிரகங்களில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இவ்வைந்து கிரகங்களுக்கும் பஞ்ச மஹாபுருஷர்கள் என்று பொதுவாக ஒரு பெயர் உண்டு. 
1) செவ்வாயால் ஏற்படக்கூடிய ருசக யோகம்.
2) புதனால் ஏற்படக்கூடிய பத்ராயோகம்.
3) குருவால் ஏற்படக்கூடிய ஹம்ச யோகம்
4) சுக்கிரனால் ஏற்படக்கூடிய மாளவியா யோகம்
5) சனியால் ஏற்படக்கூடிய சச யோகம்
 நீசம் அடையாமல் , மேலே கூறிய கிரகங்கள் - இலக்கின கேந்திரத்தில் - நின்றாலோ, அல்லது தனது சொந்த வீடுகளில் ஆட்சி பெற்றாலோ , அல்லது உச்ச வீடுகளில் இருந்தாலோ - இந்த பஞ்ச மகா யோகங்களில் ஒன்று ஏற்படுகிறது. அதனால் என்ன பலன்..? அந்த கிரகங்களோட காரகத்துவம் பாருங்க.. 
உதாரணத்துக்கு - பத்ரா யோகம். புதன் - கேந்திரத்திலோ - இல்லை கன்னி , மிதுனத்திலோ இருந்தால் வரும். இந்த ஜாதகர்கள் - புத்தி சாலி, அறிவு ஜீவி.. பள்ளி படிப்பு கொஞ்சமா இருந்தாக் கூட - எதாவது ஒரு துறையில் , தானே முயன்று - கற்று - அந்த துறையில் நல்ல தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
அனுபவத்தில் - புதன் உச்சமாக , ஆட்சியாக இருப்பவர்கள் :- நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். காதலுக்கு தூது போவார்கள்.., காதலிக்கும்  நண்பர்களை சேர்த்து வைப்பதில் - ஆர்வம் இருக்கும். அதனால் பிரச்னை வரும். சுயமாக சிந்திக்கும் தன்மை கொஞ்சம் கம்மி தான். ஆனால் - 'கெத்து' மெய்ண்டைன் பண்ணுவாங்க. இப்படி......
மத்த யோகங்களுக்கும் - இதே மாதிரி - எடுத்துக்கொள்ளவும்.
சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

சந்திரனோடு மற்ற கிரகங்கள் சம்பந்தப்படும் போது ஏற்படும் யோகங்களைக் கவனிப்போம்.  ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அது துருதரா யோகம் எனப்படும்.  இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உறவையும் நல்ல குணத்தையும் வாகன சுகத்தையும் கொடுக்கும்.

அதேபோல சந்தினுக்கு 12வது இடத்தில் ராகு கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அனபாயோகம் எனப்படும்.  இந்த யோகம் ஆரோக்கியத்தையும், பெயர் புகழையும் தரும்.

 சந்திரனுக்கு 2ம் இடத்தில் சூரியன், ராகு, கேதுக்களைத் தவிர வேறு கிரகங்கள் இருந்தால் அதுசுனபா யோகம் எனப்படும்.  இந்த யோகம் சாதாரண மனிதனை உழைப்பின் மூலமாக உயர்த்தி அரசனுக்குச் சமமாக ஆக்கிவிடும்.
 சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் எதுவும் இல்லாது அது கேமத்துருமம் என்னும் யோகமாகும்.  இந்த யோகம் ஒரு ஜாதகத்தில் இருந்தால். இது எவ்வளவு பெரிய செல்வந்தர்களையும், அவர் இறப்பதற்கு முன் ஆண்டியாக்கி - வீதியில் நிற்க வைத்து விடும். இது பொது விதி. இதற்க்கு நிறைய விஷயங்களை சரி பார்க்க வேண்டும். அவசரப் பட்டு உடனே பலன் சொல்லி விடாதீர்கள். 

சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் குரு இருந்தால் அது கஜ கேசரி  யோகமாகும்.  இந்த யோகம் தீர்க்காயுளையும், புகழையும், பண வருவாயையும், வாகன சுகத்தையும் கொடுக்கும். 
இது வந்து ரொம்ப அபூர்வம், அப்படி இப்படினு நெறைய பேர் காதுலே பூ சுத்தி இருப்பாங்க.. நம்பாதீங்க. மாசத்துலே , குறைஞ்சது - பத்து நாள் , சந்திரனும் - குருவும் - இந்த நிலைலே தான் இருப்பாங்க. 
ஆனால் - இது ஒரு நல்ல யோகம். அதுலே சந்தேகம் இல்லை. எவ்வளவு கஷ்டப்படுற குடும்பத்திலே இந்த ஜாதகர் பிறந்தாலும், அந்த தரித்திர சூழ்நிலையிலிருந்து அந்த குடும்பத்தை மீட்டுக் கொண்டு வரும் ஆற்றல் - அந்த ஜாதகருக்கு ஏற்படுகிறது.
சந்திரனும், குருவும்  - லக்கினத்தில் இருந்து மறையாமல் இருந்தால் - இது கண்டிப்பாக - மிக சிறந்த யோகமாகும். ஜோதிடப்படி மிகச்சிறந்த யோகம் கஜகேசரி யோகமாகும்.

ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அது சந்திர மங்கள யோகமாகும்.  இந்த யோகம் அசையாத சொத்துக்களை அதிகமாகத் தரும்.  அதேநேரம் இக்கிரகங்களை அசுப கிரகம் ஏதாவது ஒன்று பார்த்தால் ஜாதகனுக்குச் சொத்துக்களைக் கொடுத்து மூளைக் கோளாறைத் தந்து விடுகிறது. 

 சந்திரனுக்கு 8, (அ) 12ல் குரு இருந்தால் அது சகடயோகமாகும்.  இந்த யோகத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை நிலையில்லாமல் சக்கரம் போல் மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருக்கும். நல்ல நிலைலே இருக்கிறவங்க - சர்ர் ருனு கீழே வந்து, திரும்ப மேல வருவாங்க..

 சூரியன் சம்பந்தப்பட்ட யோகங்கள்:

சூரியனுக்கு 2ல் சந்திரன், ராகு, கேது, தவிர, வேறு கிரகங்கள் இருந்தால் அது வேசி யோகம்எனப்படும்.  இந்த யோகத்தோடு பிறந்த ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சுய கௌரவத்தை இழந்து பணம் மற்றும் சொத்துக்களைப் பெறுவார்கள்.

சூரியனுக்கு 12ல் ராகு, கேதுக்களைத் தவிர மற்ற கிரகங்கள் இருந்தால் அது வாசியோகமாகும்.  இந்த யோகம் பெரும் புகழை ஜாதகன் பெறும்படிச் செய்யும்.  சூரியன் இருக்கும் ராசிக்கு இரு பக்கங்களிலும் எந்தக் கிரகம் இருந்தாலும் அது சுய உபயசாரி யோகம் எனப்படும்.  இது நல்ல வருவாயையும புகழையும் ஈட்டித்தரும்.
புத ஆதித்யா யோகம்
புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம் .
இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். நிபுணத்துவ யோகம் .உயர் கல்வி கற்கும் சூழ்நிலை ஏற்படும். அவசரப் படாதீங்க. நூத்துக்கு எண்பது பேருக்கு - சூரியனும், புதனும் சேர்ந்து தான் இருக்கும். இரண்டில் ஒன்று - ஆட்சி , உச்சம் இருக்க வேண்டும். அல்லது - கேந்திர, கோணங்களில் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மறைவு ஸ்தானங்களில் இல்லாமல்  இருக்க வேண்டும். தீய கிரக சேர்க்கை , பார்வை இருக்க கூடாது. 
 

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz