10.மகம் :
நல்ல செல்வந்தராகவும், புத்திசாலியாகவும், பிறரிடம் கருணை காட்டி உதவி செய்பவராகவும, வியாபாரத்தில்
வெற்றியுடன், சுகபோகமான வாழ்க்கை நடத்துவீர்கள். உங்களுக்கு பல பணி யாட்கள் இருப்பார்கள் தெய்வ
காரியங்களில் ஈடுபாடு இருக்கும். மனைவி உடன் சுமுகமான உறவுகளை கொண்டிருப்பீர்கள். பெற்றோர்களிடம் ,
கடமைப் பற்றுடன் நடந்து கொண்டாலும், எதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய, சுபாவம், குடிகொண்டிருக்கும்.
எண்ணமும் செயலும், திட்ட வட்டமானதாக அமைந்திருக்கும்.
மகம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மகாலிங்கேஸ்வரர்
அம்மன்/தாயார் : மரகதவல்லி , மாணிக்கவல்லி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : விராலிப்பட்டி , தவசி மேடை , திண்டுக்கல் மாவட்டம் .
11.பூரம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், மென்மையாக பேசும் குணம் உடையவராகவும், சமயப்பற்றும்,
துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் கொண்டவராக
.இருப்பீர்கள். நீங்கள், காமவெறி உணர்ச்சியும், கர்வமும் கொண்டிருப்பீர்கள. நிதிநிலை அவ்வளவு வசதியாக இராது .
பூரம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் (திருவரங்குளநாதர்)
அம்மன்/தாயார் : பிரஹன்நாயகி (பெரியநாயகி)
தல விருட்சம் : மகிழமரம்
தீர்த்தம் : ஹர தீர்த்தம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருவரங்குளம் , புதுக்கோட்டை மாவட்டம்
12.உத்திரம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், நீங்க, கருணை உள்ளம் நிறைந்தவராகவும், பொறுமை மிக்கவராகவும்,
நல்ல பண்பாடான நடத்தை கொண்டவராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படு பவராகவும் விளங்குவீர்கள்.
நீங்கள்,உங்கள் சொந்த சம்பாதிப்புடன், சுகபோகமாக வாழ்க்கை நடத்துவீர்கள. உங்கள் உடல் எடை அதிகரித்து விடலாம் கவனம் தேவை.
உத்திரம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மாங்கல்யேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் : மங்களாம்பிகை
தல விருட்சம் : பவளமல்லி
தீர்த்தம் : கிணறு
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : இடையாற்று மங்கலம் . திருச்சி மாவட்டம் .
13.அஸ்தம் :
இந்த நட்சத்த்திரத்தில் பிறந்திருப்பதால், மிகுந்த விவேகியாகவும், தாராள மனம் கொண்டவராகவும், செல்வந்
தராகவும், பலராலும் விரும்பி நேசிக்கப்படுபவராகவும் விளங்கு வீர்கள். துறவிகளிடம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்.
30 லிருந்து 32 வயதுவரையான காலத்தில் நீங்கள் முன்னேறுவீர்கள்.
அஸ்தம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்
மூலவர் : கிருபாகூபாரேச்வரர்
அம்மன்/தாயார் : அன்னபூரணி
தல விருட்சம் : வில்வம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : கோமல். நாகப்பட்டினம் மாவட்டம்
14.சித்திரை :
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், தரம சிந்தனை இருக்கும்.அன்பான குணம் கொண்டவர்களை மிகவும்
விரும்புவீர்கள். போர், உத்திகள் பற்றிய பல விஷயங்கள், உங்களுக்குத் தெரிந்திருக்கும். படிப்பும், அறிவும், பணமும்
படைத்தவரான நீங்கள், சத்திய வாதியாக விளங்குவீர்கள். நீங்கள் கடின உழைப்பாளியாகவும், துணிச்சல் மிக்கவராகவும்,
வைத்தியம், ஜோதிடம் ஆகியவற்றில் உங்களுக்கு நல்ல அறிவாற்றல் இருக்கும்
சித்திரை நட்சத்தித்தலம் :
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
மூலவர் : சித்திரரத வல்லபபெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூமிதேவி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : குருவித்துறை , சோழவந்தான், மதுரை மாவட்டம்
15.சுவாதி ;
நல்ல அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், விளங்கு வீர்கள் உங்களுக்கு சமயப்பற்று
இருக்கும்.தர்ம காரியங்களுக்காக நன்கொடை அளிப்பீர்கள். உங்கள் உணர்ச்சி வெறிகளை கட்டுப்படுத்தி
வைத்திடும் ஆற்றல் பெறுவீர்கள். மனதில் ஏற்படும் காம எண்ணங்களை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரத்தில்
தேர்ச்சி, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பீர்கள்.
சுவாதி நட்சத்தித்தலம் :
அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : தாத்திரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பூங்குழலி
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : சித்துக்காடு, சென்னை மாவட்டம்
16.விசாகம் :
இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால், சமயப் பற்றும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருப்பீர்கள் ஆனால்
பொறாமையும், பகைமை உணர்வும் உங்களிடம் இருக்காது. இயற்கையிலேயெ ஞானமும், அறிவும் இருக்கும்
உங்கள் மனநிலை சில நேரம் சஞ்சலம் கொண்டதாக இருந்தாலும் பின் தெளிவாகிவிடுவீர்கள்.
விசாகம் நட்சத்தித்தலம் :
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
மூலவர் : முத்துக்குமாரசுவாமி
தீர்த்தம் : பூஞ்சுனை
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : பண்பொழி ,தென்காசி, திருநெல்வேலி மாவட்டம்
17.அனுஷம் :
இளவயதிலேயே சிரமப்பட்டாலும், பிற்காலத்தில் நல்ல செல்வந்த ராகவும், பெரும்பாலும் அயல் நாட்டில்
வசிக்கக் கூடியவராகவும் இருப்பீர்கள். பயணம் செய்வதில் உங்களுக்கு நல்ல விருப்ப மிருக்கும். நீங்கள் நன்கு
படித்துத் தேர்ச்சி பெற்றவராகவும், பணம் ஈட்டுவதில் படுசாமர்த்திய சாலியாகவும், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்,
உதவியும் செய்வீர்கள்
அனுஷம் நட்சத்திரத்தலம் :-
அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : மகாலட்சுமீஸ்வரர்
அம்மன்/தாயார் : உலகநாயகி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : நீலப்பொய்கை
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்
18.கேட்டை :
இந்த நட்சத்திரத்திரத்தில் பிறந்தவராதலால், அழகான குணமும், மனதில் அன்பும் இருக்கும். பலவிதமான கலைகளை
கற்ப்பார்கள். போராட்டமான வாழ்வு அமைந்தாலும் பிற்காலத்தில் மிகுந்த புகழ் பெற்றவராக இருப்பார்கள். யாரையும்
பொருபடுத்தாமல் வாழ்க்கை கூடியவர்கள்.
கேட்டை நட்சத்திரத்தலம் :
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
மூலவர் : வரதராஜப்பெருமாள்
அம்மன்/தாயார் : பெருந்தேவி
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : பசுபதிகோவில், தஞ்சாவூர் மாவட்டம்